புலமைபரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் ஆரம்பம்

(FASTNEWS|COLOMBO) – 2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் இன்று(15) ஆரம்பாகியுள்ளன.

வினாத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

39 பாடசாலைகளில் வினாத்தாள் திருத்தப் பணிகள் இடம்பெறவுள்ளதுடன், இந்த பணிகளில் 6976 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.