பூஜித்தவுக்கு பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக மின்தூக்கி இயக்குனரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டிந்தார்.

பின்னர், கைது செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 2 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் அவரை விடுதலை செய்வதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.