பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை

(FASTNEWS|COLOMBO) – கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் இன்று(03) மீண்டும் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்படவுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய வைத்தியசாலைக்கும் பூஜித் ஜயசுந்தர அனுமதிக்கப்பட்டுள்ள நாரஹேன்பிட்ட வைத்தியசாலைக்கும் சென்ற கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, இன்று வரை விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்திருந்தார்.