போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கைதி ஒருவரை வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண் கைதிகள் சிலர் நேற்றும்(20) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் அமைதியின்மையுடன் செயற்பட்ட பெண் கைதிகள் தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த கைதிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய குறிப்பிட்டுள்ளார்.
அமைதியின்மையுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்டவர்கள் வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக துஷார உபுல் தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் கைதிகள் இதற்கு முன்னர் சிறைச்சாலை கூரைமீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.