பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் அளவில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தொழிற்சங்க மட்டத்திலான கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், பெருந்தோட்ட யாக்கங்களுடனான உத்தியோகபூர்வ சந்திப்புக்கான திகதி கோரப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 12ம் திகதி அளவில் இந்த சந்திப்பை நடத்த இணங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.