பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…

நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய , ஊவா , சப்ரகமுவ , வடமத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை , மேல் , தென் மற்றும் வடமேல் கடற்பிரதேசங்களில் இன்று காலை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.