நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ,வவுனியா மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவுவேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.