நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் மேற்கு மாகாணங்களிலும் கேகாலை மாவட்டத்திலும் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் எனவும் மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என்று திணைக்களம் இன்று(04) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது