எரிபொருள் விலைகள் இம்மாதமும், மின்சார கட்டணங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதமும் அதிகரிக்கப்படும் என அரசினால் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு வழங்கவுள்ள அடுத்த கட்ட கடனுக்கு முன்னதாக குறித்த விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யோசனைகளை நடைமுறைப்படுத்திய பின்னர் அமெரிக்கா 165 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு விடுவிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma