இலங்கையின் பௌத்த பிக்குமார் உட்பட்ட குழுவுக்கு முதல் தடவையாக பாகிஸ்தானில், பௌத்த மதசடங்குகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
38 பேரைக்கொண்ட இலங்கை குழு அண்மையில் மார்டான் என்ற இடத்தில் உள்ள பௌத்ததலத்தில் அண்மையில் வெசாக் பண்டிகை நிகழ்வுகளை நடத்தியதாக இந்திய செய்தித்தாள்ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து சென்ற குழுவில் பௌத்த பிக்குமார் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த பௌத்த தலத்தை எதிர்வரும் காலங்களில் உலகவாழ் பௌத்தர்கள் தரிசிக்கமுடியும் என்று பாகிஸ்தானிய அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.