அரிசி உற்பத்தி உயர்வடைந்துள்ளதாக கூறி கோதுமை மாவின் விலையினை உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டிந்தால், அனைத்து பேக்கரி உற்பத்திகளதும் விலைகள் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி உற்பத்தி உயர்வடைந்துள்ளதென்றால் முதலில் இறக்குமதி செய்யப்படும் அரிசிகளை இடை நிறுத்துமாறும் குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.