பாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இரு பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.