எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துக் கட்டணத்தை குறைப்பது சம்பந்தமாக பேச்சுவார்ததை நடத்த எதிர்பார்ப்பதாக பேருந்து பணியாளர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 7ம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.