(FASTNEWS|COLOMBO) – மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளுடன் அதிவேகமாக சென்ற பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சாரதியின் கட்டுப்பட்டை இழந்து வேகமாக சென்ற பேருந்து, சாலையோரம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த விபத்தில், குழந்தைகள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.