(FASTNEWS|COLOMBO) – உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி சென்ற பேரூந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்த விபத்திற்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த பேருந்து இன்று காலை யமுனா அதிவேக வீதியில் ஆக்ரா அருகே பாலத்தில் சென்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றன.