கட்டுகஸ்தொட – குருநாகல் வீதியில் கலகெதர – மடவல பிரதேசத்தில் யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது
இவ்விபத்தில், 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(30) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் கலகெதர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.