(FASTNEWS|COLOMBO) பேருவளையில் 230 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய எட்டு சந்தேகநபர்களையும் மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அரச இரசாயண பகுப்பாய்வாளரின் அறிக்கையை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறும், விசாரணை நடவடிக்கைகளையும் விரைவாக நிறைவுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.