பேரூந்து கட்டணம் 20% மாக அதிகரிக்க அரசிடம் கோரிக்கை..

பேரூந்து கட்டணம் 20% மாகவும், ஆகக் குறைந்த கட்டணத் தொகை 15 ரூபாவாகவும் உயர்த்தப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரியுள்ளது.

குறித்த கோரிக்கைக்கு சாதகமாக பதில் ஏதும் கிடைக்காதவிடத்து, எதிர்வரும் 16ம் திகதி நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பை நடாத்தவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

 

#rishma