எரிபொருள் விலை அதிகரித்துள்ளதை முன்னிட்டு, பேரூந்து கட்டண அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று(15) தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதேவேளை, குறித்த பேரூந்து கட்டண விலை தொடர்பில் நேற்று(14) விசேட கலந்துரையாடலொன்று இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவில் அதன் தலைவர் தலைமையில் இடம்பெற்ற போதிலும், அது தோல்வியில் முடிவடைந்ததாக பேரூந்து சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.