காங்கோ குடியரசு நாட்டில் லொரியுடன் பேரூந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான காங்கோ குடியரசு நாட்டில் சாலைகள் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலை விபத்துகள் பெருகி வருகின்றன.
இந்த விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
சிகிச்சை பெற்றுவரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.