பேரூந்து விபத்தில் சுமார் 24 பேர் வைத்தியசாலையில்…

முல்லைதீவு – வட்டாபள்ளிய பிரதேசத்தில் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று(09) அதிகாலை மரம் ஒன்றுடன் மோதுண்டு 24 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வட்டபள்ளி பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வேகம் காரணமாக குறித்த இந்த விபத்து இடம்பெறுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

 

####