பொகவந்தலாவை வனப்பகுதியில் தீ; 4 ஏக்கர் காடு நாசம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொகவந்தலாவ கிவ் தோட்ட வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளது.

குறித்த தீயினால் 4 ஏக்கர் வனப்பகுதியில் எரிந்து கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 10 மணி அளவில் தீ பரவல்  இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.