பொசான் தின விசேட வழிபாடுகளை முன்னிட்டு இம்மாதம் 06ம் திகதி தொடக்கம் கொழும்பு கோட்டையில் இருந்து அநுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் 08 மற்றும் 09 ஆகிய தினங்களில் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் மூலம் 72 முறை ரயில்கள் பயணிக்கவுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதுதவிர்ந்த, குறித்த நாட்களில் அநுராதபுரம் – மெதவச்சி மற்றும் அநுராதபுரம் – மஹவ ஆகிய இடங்களுக்கும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

