பொதுத்தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை(01) காலை 10 மணிவரை ஓத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று(29) ஒன்பதாவது நாளாகவும் இடம்பெற்றது.