பொதுத் தேர்தலை நடத்துமாறு ஐ.தே.கட்சி கோரிக்கை

உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு ஐ.தே.கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.தே.கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பில் இறுதியான இணக்கப்பாட்டிற்கு வராது அரசியல் கட்சிகள் அசமந்த போக்கை கடைபிடிப்பதாக அவர் கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் உரையாற்றிய போது, ஜனவரி 8 ஆம் திகதி இடம் பெற்ற சூழ்ச்சி பொது தேர்தலின் பின்னரே நிறைவு பெறும் என தெரிவித்தார்.