பொதுத் தேர்தல் – மனுக்கள் தொடர்பான தீர்மானம் வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள், ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்படி குறித்த மனுக்கள் நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.