பொதுத் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு இன்று(05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

166 தொகுதிகளில் இருந்து 196 பேரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.