நாடளாவிய ரீதியாக இன்று(04) பொது சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கத்தின் பொருளாளர் யசஸ் முதலிகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகர சபையில் பணிபுரிந்த சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் 05 பேரை சுகாதாரத்துறை செயலாளரினால் தன்னிச்சையாக இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
தமது கோரிக்கைக்கு அதிகாரிகள் முறையான தீர்வு வழங்காத பட்சத்தில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மேலும் குறித்த சங்கம் அறிவித்துள்ளது.
(rizmira)