(FASTNEWS|COLOMBO) – கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட கரையோர ரயில் மார்க்கத்தின் பொது செயலாளர் அலுவலக தரிப்பிடம் இன்று(31) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அலுவலக ரயில்கள் மாத்திரம் குறித்த தரிப்பிடத்தில் நிறுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய பயணிகளின் பாதுகாப்பு கருதி விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விஷேட நுழைவாயில் மூலம் பயணிகள் உட்பிரவேசிக்குமாறு ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.