பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியின் இறுதிக் கிரியை இன்று(11)…

(FASTNEWS|COLOMBO) பம்பலபிட்டி விபத்தில் காயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையின் சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்தரவின் தேகம் குறித்த இறுதிக் கிரிகைகள் இன்று பூரண பொலிஸ் மரியாதையுடன் இடம்பெறவுள்ளது.

பொரளை பொது மாயானத்தில் இந்த இறுதி கிரிகைகள் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவரின் சடலம் அஞ்சலிக்காக பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.