பொலன்னறுவை விவசாயிகளுக்கான காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று…

பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கான காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(30) நடைபெறவுள்ளது.

தமன்கடுவ, லங்காபுர, பொலன்னறுவை, எலஹெற மற்றும் மெதிரிகிரிய ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கே குறித்த காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கவுள்ளன.

இவ்வாறு இன்று 1053 காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

விகாரைகள் 03 இற்கு புனித இடங்களுக்கு உரிமைப் பத்திரங்கள், இஸ்லாம் பள்ளிவாயல்களுக்கு காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.