பொலித்தீன் சார்ந்த பைகள் உள்ளிட்ட உக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும் பைகளில் பொருட்களை பொதியிட்டு, பொறுப்பற்ற முறையில் நுகர்வோருக்கு வழங்கும், வர்த்தக நிலையங்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறான வர்த்தக நிலையங்களின் ஊடாக, சுற்றாடலுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய, ஆகக் கூடுதலான பொலித்தீன்கள் வெளியேற்றப்படுகின்றது என்றும், இவை பொறுப்பற்ற செயற்பாடுகள் என்றும் சுற்றுச் சூழலியலாளர்கள், அரச அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், பொறுப்பற்ற முறையில் செயற்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக, எதிர்காலத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் சுற்றுச் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.