பொலிஸார்  துப்பாக்கிச் சூட்டில்  அனுராதபுரத்தில் ஒருவர் பலி

அனுராதபுரம் – மீகெல்லேவ விகாரையில் உள்ள புத்தரின் சிலை மற்றும் ஏனைய சில பெறுமதியான பொருட்களை மோட்டர் சைக்கிளில் சென்ற இரண்டு கொள்ளையர்கள் நேற்றிரவு கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். இதன்போது, கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சமரின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.