(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் இன்று மற்றும் நாளைய தினம் வீதி சோதனை சாவடிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கு பொலிசார் தீர்மானித்துள்ளனர்.
வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமுலில் மக்கள் வீதிகளில் நடமாடுவதை விடுத்து தத்தமது வீடுகளிலேயே இருக்க வேண்டுமென பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
ஊரடங்கு அமுல்படுத்தப்படுத்தப்படாத பகுதிகளிலுள்ள மக்கள் தனிமைப்படுத்தல் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.