24வது ஆசிய – பசுபிக் செயற்பாட்டு போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 03ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதுடன், அந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக் கொள்கின்றன என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஜப்பானிற்கு புறப்பட்டு சென்றனர்.