பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

(FASTNEWS | COLOMBO) – பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தன்னை பதவியில் இருந்து நீக்குவது சட்டவிரோதமானது என தெரிவித்து இன்று(29) உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அரசியலமைப்பு குழு உள்ளிட்ட சிலர் இதன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என குறிப்பிட்டு உத்தரவொன்றை வௌியிடுமாறு அவர் இதனூடாக கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.