(FASTNEWS|COLOMBO) சிலாபம் நகரப்பகுதி மற்றும் குளியாபிட்டி, தும்மலசூரிய மற்றும் பிங்கிரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
சிலாபம் நகரில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே நேற்று மாலை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, ஏற்பட்ட நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக குளியாபிட்டி, தும்மலசூரிய மற்றும் பிங்கிரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.