FCID இரத்து செய்யப்படாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை (FCID) இரத்து செய்யக் கோரும் வகையிலான அமைச்சரவை ஆவணத்திற்கான ஒப்புதலை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.

பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவானது முன்னைய ‘நல்லாட்சி’ அரசினால் நிதி மோசடி தொடர்பில் ஆராய 2015ம் ஆண்டு நிறுவப்பட்டது.

இதனை இரத்து செய்யக் கோரி கடந்த வியாழன்(02) அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.