போதுமான அரிசி கையிருப்பில் – புதிதாக அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது…

நாட்டிற்குத் தேவையான போதுமான அரிசி கையிருப்பில் காணப்படுவதாக சதொச, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையாளர் சங்கம் என்பன தெரிவித்துள்ளன.

பெரும்போக அரிசி தற்சமயம் சந்தைக்குக் கிடைக்கின்றது எனவும் இதற்கு மேலதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியும் சந்தையில் காணப்படுகின்றது. இந்நிலையில், புதிதாக அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்று சதொச நிறுவனத்தின் தலைவர் மொஹமட் றிஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை பெரும்போகத்தில் 6 லட்சம் ஹெக்டயர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது