ஹெரோயின் போதை மாத்திரைகளை வயிற்றில் விழுங்கி இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், 350 கிராம் நிறையுடைய போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடத்தி வந்துள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 45 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.