போபகேயிற்கு எதிராக 58 பேரது கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர்..

தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை பிரச்சினைக்குள்ளாக்கும் ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற புனரமைப்பு அமைச்சின் செயலாளர் நிமல் போபகேயை அப்பதவியிலிருந்து நீக்கிவிடுமாறு கோரி, அரசாங்கத்திலுள்ள பின் வரிசை உறுப்பினர்கள் 58 பேர் கையொப்பமிட்ட மகஜர் ஒன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பல தடவைகள் பிரச்சினைக்குள்ளாக்கியுள்ளதாகவும் அவர்கள் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.