போலியான புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக வீதியோரத்தில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.