மகரகம நகர சபையின் தலைவர் விராஜ் பியரத்னவினால் நான்கு ஊழியர்களுக்கு தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு நகர சபையின் அனைத்து ஊழியர்களும் தத்தமது அன்றாட பணிகளிலிருந்து விலகி இருக்கின்றனர்.
குறித்த நான்கு ஊழியர்களும் நேற்று(06) இரவு மதுபானம் அருந்துவதாக நகர சபைத் தலைவருக்கு தகவல் கிடைத்ததையடுத்து நால்வரையும் சபைக்கு அழைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக குறித்த நகர சபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த அந்த ஊழியர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் அந்த நான்கு ஊழியர்களுக்கும் எச்சரிக்கை செய்த போதிலும் தாக்குதல் நடத்தவில்லை என நகர சபையின் தலைவர் விராஜ் பியரத்ன கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.