மகாவலி நீரில் மீன் உற்பத்தி திட்டம்…

மகாவலி நீர்த்தேக்க நீரில் மீன்வளத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர கடற்றொழில் மற்றும் நீர்வள அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்வருட இறுதிக்குள் நாட்டில் நன்னீர் மீன் உற்பத்தியை 2இலட்சத்து 38 ஆயிரம் மெற்றிக்தொன்களாக அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

மொறஹாகந்த நீர்த்தேக்கத்தின் நீர் வடமத்தியமாகாணத்தில் மகாவலி நீர்த்தேக்கத்திற்கு விடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த நீர்வளத்தைக்கொண்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கையை நிலையாக மேற்கொள்ளமுடியும்.