(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 9ஆவது பாராளுமன்றம் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ் தற்போது பொறுப்பேற்றுள்ள நிலையில் எதிர்மறை கருத்துக்களும் சமூக வலைதளங்களில் வலம் வரத்தான் செய்கின்றது எனலாம்.
இந்நிலையில் அடுத்த பிரதமர் பதவி பசில் ராஜபக்ஷவுக்கா அல்லது ஷிரந்தி ராஜபக்ஷவுக்கா என்ற போட்டியும் சமூக வலைதளங்களில் வலம் வந்திருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கம் ஒன்றில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தது.

“மஹிந்த ராஜபக்ஷவின் உடல் நிலை சரியில்லை. இன்னும் 2 -3 வருடங்களில் அவர் மரணிப்பார், பின்னர் அவரது மனைவி பிரதமர் பதவிக்கு கண்ணு வைத்துள்ளார். இந்த சொற்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
Mahinda Rajapaks’s health is not the best. So if he passes away in 2-3 years, beware that his wife is eyeing for the prime minister position. Mark my words. #Srilanka #lka
— Daily News Sri Lanka (@dailynews_lanka) August 18, 2020