மகேஸ் நிஸ்ஸங்க பிணையில் விடுதலை…

நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் மகேஸ் நிஸ்ஸங்க மற்றும் அவரது புதல்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா 75 ஆயிரம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவர்களை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று(18) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.