மக்களிடையே தண்ணி காட்டும் ஹகீமிடமிருந்து தண்ணி நியமனங்கள்

தேர்தல்கள் நெருங்கும் தருவாயில் அரசியல் வாதிகளின் முகங்களும் தாராளஅர்ப்பணிப்புக்களும் வெளியே கசிகின்ற தருணமிது…

ஆம், தேசிய நீர் வடிகாலமைப்பு சபையில் முதல் கட்டமாக குருநாகல் மாவட்டத்தில் ௧௦ பேருக்கு; வடமேல் மாகாண சபை உறுப்பினர் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ரிஸ்வி ஜவஹாரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீர் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவுப் ஹகீம் இந்நியமனங்களை வழங்கி கௌரவித்துள்ளார்.

அரசியல் உள்நோக்கங்களுக்காக இவ்வாறான நியமனங்களை வழங்கி வருகின்றாரோ தெரியவில்லை..

இந்நிகழ்வில் குளியாப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் இல்ஹாம் சத்தார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.