நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு நடவடிக்கைக்காக முப்படையினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.
காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளுக்காக நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை இராணும் தெரிவித்துள்ளது.
இது தவிர காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் நிவாரண பணிகளுக்காக கடற்படையினரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நெலுவ, மொரவக்க, கம்புறுபிட்டிய போன்ற பிரதேசங்களில் 04 படகுகள் அனுப்பப்பட்டுள்ளதுடன், மாத்தறை மாவட்டத்திற்கு 01 படகும், களுத்துறை, கலவானை பிரதேசங்களுக்கு 02 படகுகளும் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் விமானப் படையினரின் இரண்டு ஹெலிகப்டர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
பெல் 212 மற்றும் எம்.ஐ. 17 வகை ஹெலிகப்டர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விமானப்படை மேலும் அறிவித்துள்ளது.