மக்களை கொலை செய்து முதலைக்கு இரையாக்கிய சம்பவம் – ராஜித கைதாகும் சாத்தியம்..

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுகாப்பு செயலாளராக பதவியில் இருக்கும் போது கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் வெள்ளை வேனில் மக்களை கடத்திச் சென்று கொலை செய்து முதலைகளுக்கு இரையாக்கிய சம்பவம் தொடர்பில் அம்பலப்படுத்திய வெள்ளை வேன் சாரதி எனக் கூறிய நபரை கைது செய்ய [பொலிசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தார்.

அவரை கைது செய்ய முடியாமல் போனால் குறித்த சம்பவத்தினை அம்பலப்படுத்திய ராஜித சேனாரத்னவை கைது செய்து விசாரிக்க வேண்டிய நிலை பொலிசாருக்கு ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.