மக்கள் வசிக்கும் இடங்களில் ஆயுதக்களஞ்சியசாலைகளை நிறுவ மாட்டோம் – சாகல

மக்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பு படைகளுக்காக ஆயுத களஞ்சியசாலைகளை அமைப்பதை தவிர்த்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், சேதமடைந்த வீடுகள் தொடர்பில் முழுமையான விவரங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

சீதாவாக்க பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.